நீ வருகிறாயா நான் கிளம்பட்டுமா
என்றது கடிகாரத்தின் நேரம்...!
எங்கள் புன்னகையையும் சுமந்துச்செல் என்றது தோட்டத்தில் பூத்த மலர்கள்...!
எனது குரலையும் மனதில் பதித்துக்கொள் என்றது மரக்கிளையில் இருந்த குயில்...!
அப்பா என்னையும் கூட்டிப்போங்கள் என்று கழுத்தை கட்டிக்கொண்டாள் என் செல்ல மகள்...!
தோழா நான் தஞ்சையில் இருந்து கிளம்பிவிட்டேன் என்றது சொல்லிடப்பேசியில் தோழன் பாலாவின் குரல்...!
இதோ இந்த தொகுப்பை முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறேன் என்றேன் நான்...!
வேகமாய் சீறிப்பாய்ந்து பயணப்பட்ட மகிழுந்தில் சாரதியாக செயல்வீரர் ஜெகதீசன்...!
பயண முடிவில் இருக்கரங்கள் நீட்டி அன்புடன் அழைத்தது பற்பல பெருமைகள் கொண்ட காஞ்சி மாநகரின் அண்ணா அரங்கம்...!
தமிழுக்கும் தமிழனுக்கும் மேலும் அழகு சேர்க்கும் வாகையில் இயல் இசை நாடகத்தால் வரவேற்றது காஞ்சி முத்தமிழ்ச்சங்கம்...!
படப்படக்கும் மனதுடன் இனிமையாக நிகழ்வை தொகுத்தார் வாழ்க தமிழ் பெண் கவி சகோ துளசிமணி பழனிச்சாமி ...!
தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை உணர்வு பேச்சால் மனதை கவர்ந்தார்
முனைவர் ஐயா ஞானசம்பந்தன்...!
தங்களுடைய திறமைகளை கலைக்கு அர்ப்பணித்த கலைஞர்களை பெருமை படுத்தும் விதமாய்
கலை வேந்தர் விருது...!
சமூகத்திற்க்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி தனது அடையாளத்தை தானே செதுக்கிக்கொண்டவர்களுக்கு
சமுதாய சிற்பி விருது...!
முகநூலை சமூக அக்கறையுடனும் அறிவுசார் பகிர்வுடன் தொடரும் தோழர்களுக்கு முகநூல் வேந்தர் விருது...!
இன்று தான் பிறந்த மழலைகள் போல சிரித்து மகிழ்ந்தனர் முகநூல் நண்பர்கள்...!
ஆகா! என்ன தவம் செய்தேன் இந்த விருதை வாங்க எனது இனிய தோழர்களின் ஒத்துழைப்பால் விருது கிடைத்தது வாழ்க தமிழ் க்கு...!
அருமையான அணிவகுப்பில் அழகான விருது விழா என்று நான் எண்ணியது போலவே சொன்னார்கள் வருகை தந்த தமிழ்மக்கள்...!
மீண்டும் மகிழுந்து பயணம் வசிப்பிடத்தை நோக்கி என்ன ஒரு ஆச்சரியம் அடைமழை என்னும் பூக்களை தூவி வரவேற்றது சென்னை...!
காஞ்சியில்
விருது கலை நிகழ்வு தமிழனை சக தமிழன் ஏற்றிவிடும் அகமகிழ்வு
காஞ்சி முத்தமிழ் சங்கத்தின் நிறுவனர் தோழர் லாரன்ஸ் அவர்களுக்கு
விருது பெற்ற எனது சகோதர சகோதரிகள் சார்பில் மீண்டும் ஒரு முறை எனது நன்றிகள்
இந்த இனிய நேரத்தில்
ஒன்று கூடியது மிகவும் அருமையான நினைவு வருகை தந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்
வாழ்க தமிழ்
நட்புடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"