வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மனிதனா தெய்வமா..?

கருவில் இருந்து இறங்கி கல்லறை
நோக்கிய பயணமே வாழ்க்கை...

தனக்காக மட்டுமே வாழ்பவன் மனிதன்.!

பிறருக்காகவும்
வாழ்பவன் தெய்வம்.!

இதில் நீ.....

மனிதனா.? தெய்வமா.?

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கோவில் தெய்வம்....!

கோவில் ஏன்.?
தெய்வம் எதற்க்கு.?

கோவில் எங்கே.?
தெய்வம் எங்கே.?

கோவில் என்றால்.?
தெய்வம் என்றால்.?

நல்ல மனமே
 கோவில்...!

நம்பிக்கை தரும்
மனிதனே தெய்வம்....!

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

நம்பிக்கை....!!!


பெற்றேடுத்து பெயரிட்டு
அறிவும் அழகும் அடையளமாக்கி
பெருவாழ்வு தந்த
தாய் தந்தையை
உதறி விட்டு...

உனது கடைகண் பார்வையில்
தனது கடைநிலையை இழந்து காதலில் விழுந்து...

உன் ஆண்மையில் தஞ்சம்
அடையும் பெண்மையும்...

உன் பெண்மையில் தஞ்சம்
அடையும் ஆண்மையுமே...

"நம்பிக்கை"

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

"களவாடும் தியாகியே....

சிலர் எண்ணத்தை களவாடும்
தியாகியே...

உன் எண்ணம் போல பதிவேற்றும்
தியாகியே...

முகநூலில் துவங்கி ஏனைய தளங்கள் வரை
தொடர்ந்து பதிவிடும் தியாகியே...

வார இதழ், மாத இதழ், மின் இதழ்,
என உன் பெயரையும் இணைத்து பகிர்ந்து கொள்ளும் தியாகியே...

நீ உண்மையில் தியாகி தான்
ஏன் எனில் அடுத்தவர் கற்பனை குழந்தைக்கு
உன் பெயரை முன் எழுத்தாய் தருகிறாயே...!!!


எனது கற்பனை குழந்தையுடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

சனி, 22 ஆகஸ்ட், 2015

"முயன்றால் தொட்டுவிடலாம்...!!!

வானத்தை எட்டி பிடிக்க முயன்றால்
மேகத்தை  தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
வெயில் மழையின் முன் அறிவிப்பு!

சூரியனை எட்டி பிடிக்க முயன்றால்
சந்திரனை தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
சந்திரனில் மனிதன் கால் தடம்!

லமரத்தை எட்டி பிடிக்க முயன்றால்
விழுதுகளை தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
மரக்கிளையில் ஆடுகிறது ஊஞ்சல்!


காயத்தை எட்டி பிடிக்க முயன்றால்
பறவைகளைக் தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
காற்றில் பயணிக்கிறது விமானம்!

நினைவை எட்டி பிடிக்க முயன்றால்
நிகழ்வுகளை  தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
காட்சிகளை அள்ளித் தருகிறது தொலைகாட்சி!

காற்றை எட்டி பிடிக்க முயன்றால்
காற்றலைகளை  தொட்டுவிடலாம்
ஆம்! தொட்டதால் தான்
காதுகளுக்கு இனிமையான ஒலி தருகிறது வானொலி!

ட்டிப் பிடிக்கும் தூரத்தில் இல்லை வெற்றி! 
அதை விட்டுவிடும் எண்ணத்தில் இல்லை னின்!


- தமிழ்நேசன் த.நாகராஜ்"

புதன், 19 ஆகஸ்ட், 2015

யார் சொல்வது? தமிழா யார் சொல்வது...???

பார் புகழும் பல தமிழர் வாழ்ந்த மண் இது
அதை நீ அறியாமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

னித மேம்பாடும் பண்பாடும் கொண்ட மொழி இது
அதை நீ உணராமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

ல்வேறு திட உணவு முறையை கண்டு தந்த இனம் இது
அதை நீ ருசிக்கவே மறந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

ன்று கற்பனையும் காணாத கட்டுமானத்தை அன்றே
நமது பாட்டன் பூட்டன் கட்டியதை
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

வீரத் தீர கலை அறிவைக் கற்று தந்த இனம் இது
அதை நீ பதம் பார்க்கவே நினைக்கா விட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

யார் சொல்வது ?
தமிழா
யார் சொல்வது ?

ன்ப தமிழ் மொழி  நமது உயிர் மூச்சாகும்
அதை அறியாமல் மடியாதே என
நான் சொல்கிறேன்
தமிழா
நான் சொல்கிறேன்

வாழ்க தமிழ்

சொல்லியவண்ணம்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

புதன், 12 ஆகஸ்ட், 2015

நீயே தமிழ் தாயே...!!!

ன்னை நினைத்து
நான் கடக்க

சிலர் என்னையும்
நினைத்தார்
அந்த நினைப்பில் நீயே - தாயே

உன்னை  பற்றி பேச
நான் தகிக்க

பலர் என்னையும்
பற்றி பேசினார்
அந்த பேச்சு நீயே - தாயே

உன்னை சிறப்பு என்று
நான் துதிக்க

சிலர் என்னையும்
சிறப்பு என்றார்
அந்த சிறப்பு நீயே - தாயே

நீ தந்த வழி தடத்தில்
நான் நடக்க

எனது வாழ்க்கைத்
தடமேல்லாம் நீயே - தமிழ்த் தாயே

தமிழ்நேசன் த.நாகராஜ்"

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

காலணிகள்...!!!

தமாய் உன்னை தாங்கி செல்ல...
சவமாய் தன்னை நிறுத்தி...

பதமாய் பணிந்து போனார்கள்
உன் பாதத்திற்கு...
இந்த பாவப்பட்டவர்கள்.!


- தமிழ்நேசன் த.நாகராஜ்"


புகைப் பெண்...!!!

யிரமாயிரம் முத்தங்கள் தந்தாலும்
வெட்கப்படாமல் வாங்கினால்..!

நெருப்பால் உடலை சுட்டாலும்
வேதனை கொள்ளாமல் தாங்கினால்..!!

மரணம் உன்னை நெருங்குவதை
எண்ணி உன் காலடியிலே படுத்து தூங்கினால்..!!!

- தமிழ்நேசன்த.நாகராஜ்" 

மதமும் மனமும்...!!!

பிறக்கும் போது குழந்தை
வளரும் போது இந்து முஸ்லிம் கிருஸ்து என்று மத வேறுபாடுகள்
இறந்த பிறகு பிணம்
இதை ஏன் இன்னும் கூட உணரவில்லை சிலருடைய மனம்..?

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

தமிழால் இணைந்த தமிழா...!!!

ன்னையும் என்னையும்
ஈன்றவர்கள் வெவ்வேறு தாயாக இருக்கலாம்
ஆனால் தாலாட்டியவர் ஒருவரே

தமிழர்களாகிய நாம் அனைவரும்
தொப்புள் கொடி உறவுகளே

ஆம் தாலாட்டியவள்
தமிழ் தாய் ஆயிற்றே

வாழ்க தமிழ்

 உறவுடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"


திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இளைஞனே எழுந்திரு....!!!


ளைஞனே எழுந்திரு
இனியாவது விழித்திரு
மிழ்நாட்டின் ஏணிப்படி நீ தான்
ஏன் இப்படி கனவிலும் கண் கலங்குகிறாய்
லங்குவதை விட்டுவிடு
சாதனை பல நிகழ்த்தி விடு
ணர்ச்சிகளை சிந்திவிடாதே
உணர்வுகளை முருக்கி விடு
பாடுபட்டு முன்னேறு
பக்குவப்பட்டு விடிவாய்
விசையுள்ள படகு தான்
கரையை சேரும்
சிறகுள்ள பறவை தான்
வானில் பறக்கும்
ம்பிக்கையுடன்


இளைஞனே எழுந்திரு
இனியாவது விழித்திரு...!!!

வாழ்க தமிழ்
எண்ணமும் எழுத்தும்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

மதுவிலக்கு மது-விலக்கு...!!!



மிழா நீ.....!!!

விழிப்பதற்கே உறக்கம்...

மது குடித்து குடித்து உறங்கியே கிடக்கிறாயே..?

வெல்வதற்கே தோல்வி...
மது மயக்கத்தில் இருந்தால் தோல்வியே நிலைத்துவிடாதா..?

எழுவதற்கே வீழ்ச்சி...
நடைபாதையிலே விழுந்து எழுந்து வீழ்ச்சியே விருப்பமென்றாயே..?

மது உறக்கத்தினை உதறி.!
மயக்க தோல்விதனை துரத்தி..!!
விழும் வீழ்ச்சிதனை விரட்டி...!!!

விழித்தெழுந்து எழுச்சி கொள்.. தமிழா..!
விழித்தெழுந்து எழுச்சி கொள்.. தமிழா..!

உன் வாக்காள் வென்றது பல கட்சி 
ஆனால்
உனது வீட்டிலோ துடித்து அழுகிறாளே தமிழச்சி....
துவிலக்கு து-விலக்கு
ன் வீட்டில் இருப்பாள் அழகாய் உன் குலவிளக்கு....

வாழ்க தமிழ்

 துடிப்புடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

வாகை சூட்டிய தமிழே...!!!


விடிந்து விட்டது எழுந்திரு என்றது என் வீட்டு சேவல்...!

நானும் உன்னோடு தான் வருவேன் என்றான் ஆகாயத்தில் ஆதவன்...!

நீ வருகிறாயா நான் கிளம்பட்டுமா
என்றது கடிகாரத்தின் நேரம்...!

ங்கள் புன்னகையையும் சுமந்துச்செல் என்றது தோட்டத்தில் பூத்த மலர்கள்...!

னது குரலையும் மனதில் பதித்துக்கொள் என்றது மரக்கிளையில் இருந்த குயில்...!

ப்பா என்னையும் கூட்டிப்போங்கள் என்று கழுத்தை கட்டிக்கொண்டாள் என் செல்ல மகள்...!

தோழா நான் தஞ்சையில் இருந்து கிளம்பிவிட்டேன் என்றது சொல்லிடப்பேசியில் தோழன் பாலாவின் குரல்...!

தோ இந்த தொகுப்பை முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறேன் என்றேன் நான்...!

வேகமாய் சீறிப்பாய்ந்து பயணப்பட்ட மகிழுந்தில் சாரதியாக செயல்வீரர் ஜெகதீசன்...!

யண முடிவில் இருக்கரங்கள் நீட்டி அன்புடன் அழைத்தது பற்பல பெருமைகள் கொண்ட காஞ்சி மாநகரின் அண்ணா அரங்கம்...!

மிழுக்கும் தமிழனுக்கும் மேலும் அழகு சேர்க்கும் வாகையில் இயல் இசை நாடகத்தால் வரவேற்றது காஞ்சி முத்தமிழ்ச்சங்கம்...!

டப்படக்கும் மனதுடன் இனிமையாக நிகழ்வை தொகுத்தார் வாழ்க தமிழ் பெண் கவி சகோ துளசிமணி பழனிச்சாமி ...!

னக்கே உரிய பாணியில் நகைச்சுவை உணர்வு பேச்சால் மனதை கவர்ந்தார்
முனைவர் ஐயா ஞானசம்பந்தன்...!

ங்களுடைய திறமைகளை கலைக்கு அர்ப்பணித்த கலைஞர்களை பெருமை படுத்தும் விதமாய்
கலை வேந்தர் விருது...!

மூகத்திற்க்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி தனது அடையாளத்தை தானே செதுக்கிக்கொண்டவர்களுக்கு
சமுதாய சிற்பி விருது...!

முகநூலை சமூக அக்கறையுடனும் அறிவுசார் பகிர்வுடன் தொடரும் தோழர்களுக்கு முகநூல் வேந்தர் விருது...!

ன்று தான் பிறந்த மழலைகள் போல சிரித்து மகிழ்ந்தனர் முகநூல் நண்பர்கள்...!

கா! என்ன தவம் செய்தேன் இந்த விருதை வாங்க எனது இனிய தோழர்களின் ஒத்துழைப்பால் விருது கிடைத்தது வாழ்க தமிழ் க்கு...!

ருமையான அணிவகுப்பில் அழகான விருது விழா என்று நான் எண்ணியது போலவே சொன்னார்கள் வருகை தந்த தமிழ்மக்கள்...!

மீண்டும் மகிழுந்து பயணம் வசிப்பிடத்தை நோக்கி என்ன ஒரு ஆச்சரியம் அடைமழை என்னும் பூக்களை தூவி வரவேற்றது சென்னை...!

காஞ்சியில்
விருது கலை நிகழ்வு தமிழனை சக தமிழன் ஏற்றிவிடும் அகமகிழ்வு

காஞ்சி முத்தமிழ் சங்கத்தின் நிறுவனர் தோழர் லாரன்ஸ் அவர்களுக்கு
விருது பெற்ற எனது சகோதர சகோதரிகள் சார்பில் மீண்டும் ஒரு முறை எனது நன்றிகள்

இந்த இனிய நேரத்தில்
ஒன்று கூடியது மிகவும் அருமையான நினைவு வருகை தந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள்

வாழ்க தமிழ்

 நட்புடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

நீங்கள் இல்லாதா இந்தியாவா....???





ந்துத்துவம் ஏற்ற இஸ்லாமியர்..!

இந்தியர்கள் அனைவராலும் 
இந்தியனாய் பெருமையுடன் பார்க்கப்பட்ட
வீரத்தமிழர்..!

தமிழையும் தமிழனையும் 
உலக அரங்கில் தலை நிமிர வைத்த 
திருமணத்தையும் துறந்த எளிய தமிழன்..!

ஐயா அப்துல் கலாம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
அவரின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற பிராத்திக்கிறேன்

ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் 
என்பதில் அடியேன் பெருமை கொள்கிறேன்..... 

 பெருமையுடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"