
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?
மனித மேம்பாடும் பண்பாடும் கொண்ட மொழி இது
அதை நீ உணராமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?
பல்வேறு திட உணவு முறையை கண்டு தந்த இனம் இது
அதை நீ ருசிக்கவே மறந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?
இன்று கற்பனையும் காணாத கட்டுமானத்தை அன்றே
நமது பாட்டன் பூட்டன் கட்டியதை
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?
வீரத் தீர கலை அறிவைக் கற்று தந்த இனம் இது
அதை நீ பதம் பார்க்கவே நினைக்கா விட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?
யார் சொல்வது ?
தமிழா
யார் சொல்வது ?
இன்ப தமிழ் மொழி நமது உயிர் மூச்சாகும்
அதை அறியாமல் மடியாதே என
நான் சொல்கிறேன்
தமிழா
நான் சொல்கிறேன்
வாழ்க தமிழ்
சொல்லியவண்ணம்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக