புதன், 19 ஆகஸ்ட், 2015

யார் சொல்வது? தமிழா யார் சொல்வது...???

பார் புகழும் பல தமிழர் வாழ்ந்த மண் இது
அதை நீ அறியாமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

னித மேம்பாடும் பண்பாடும் கொண்ட மொழி இது
அதை நீ உணராமலே இருந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

ல்வேறு திட உணவு முறையை கண்டு தந்த இனம் இது
அதை நீ ருசிக்கவே மறந்துவிட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

ன்று கற்பனையும் காணாத கட்டுமானத்தை அன்றே
நமது பாட்டன் பூட்டன் கட்டியதை
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

வீரத் தீர கலை அறிவைக் கற்று தந்த இனம் இது
அதை நீ பதம் பார்க்கவே நினைக்கா விட்டால்
யார் சொல்வது ?
உன் குழந்தைக்கு
யார் சொல்வது ?

யார் சொல்வது ?
தமிழா
யார் சொல்வது ?

ன்ப தமிழ் மொழி  நமது உயிர் மூச்சாகும்
அதை அறியாமல் மடியாதே என
நான் சொல்கிறேன்
தமிழா
நான் சொல்கிறேன்

வாழ்க தமிழ்

சொல்லியவண்ணம்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக