
நான் கடக்க
சிலர் என்னையும்
நினைத்தார்
அந்த நினைப்பில் நீயே - தாயே
உன்னை பற்றி பேச
நான் தகிக்க
பலர் என்னையும்
பற்றி பேசினார்
அந்த பேச்சு நீயே - தாயே
உன்னை சிறப்பு என்று
நான் துதிக்க
சிலர் என்னையும்
சிறப்பு என்றார்
அந்த சிறப்பு நீயே - தாயே
நீ தந்த வழி தடத்தில்
நான் நடக்க
எனது வாழ்க்கைத்
தடமேல்லாம் நீயே - தமிழ்த் தாயே
தமிழ்நேசன் த.நாகராஜ்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக