புதன், 12 ஏப்ரல், 2017

என்னுயிர் துணையாளே!

இருமனங்களிலும் நிறைந்தோம்.!
திருமணம்தனில்  இணைந்தோம்.!

காட்சிகள் பல கண்டோம்.!
அனுபவங்கள் பல கொண்டோம்.!
இல்லறத்தில் சிறந்தோம்.!
அன்பு மழையினில் நனைந்தோம்.!

நம் அன்பினில் மலர்ந்த மழலைகள்
இரண்டும் அருமைப் பூச்செண்டு!
பின்னால் இருந்து எமக்கு செய்தாயே அருந்தொண்டு.!

நீயின்றி நானில்லையே.!
உண்மை இதுவின்றி வேறில்லையே.!
மீண்டும் ஒரு பிறவியென்றால்
நானாக நீயும்
நீயாக நானும்
பிறத்தல் வேண்டும்.!

எப்பிறவியிலும் நான் உனக்காக
வாழ்ந்திடல் வேண்டும்.!

என்னுயிர் துணையாளே!

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

தமிழ் மண்ணே வணக்கம்

தமிழ்நாட்டின் ஆட்சி
அதிகாரத்தை மாற்ற

தமிழர் ஆதி காலச்
சாதனை சுவடுகளை போற்ற

இனிவரும் காலங்களில்
தமிழின் புகழை பறை சாற்ற

எட்டுதிக்கும் தமிழனை
தமிழனாய் வாழ வைக்க

தமிழால் இணைந்த மக்களாய்
தமிழரின் ஆட்சி தமிழ்நாட்டில்
சிறப்பாய் மலர

இனியேனும்
தமிழை வாசிக்க மட்டுமல்ல
சுவாசிக்கவும் செய்வோம்

வாழ்க தமிழ்
வளர்க தமிழன்
வெல்க தமிழாட்சி

தமிழ் மண்ணே வணக்கம்

தமிழ்நேசன் .நாகராஜ்

மதுக்கடையால்


சிறுவயதில் 
குடித்துவிட்டு வந்த தந்தை
அடித்தான் -மதுக்கடையால்
இளம்வயதில்
குடித்துவிட்டு வந்த கணவன்
அடித்தான் -மதுக்கடையால்
நடுவயதில் 
குடித்துவிட்டு வந்த மகனும்
அடித்தான் -மதுக்கடையால்
முதிர்வயதில் 
என் குடியை கெடுக்கும் மதுக்கடையை
மூட வலியுறித்தினேன்
எவனொ ஒருவன் என்னை வீதியிலேயே அடிக்கிறானே
மதுக்கடை இந்த
அரசுக்கு கொட்டி கொடுத்தது
மதுக்கடை
என் குடியை கெடுத்தாது
அடிவங்கிய பெண்ணின் கதறல்
தமிழ்நேசன் த.நாகராஜ்

வியாழன், 6 ஏப்ரல், 2017

தமிழ் மண்ணே வணக்கம்

தமிழ்நாட்டின் ஆட்சி
அதிகாரத்தை மாற்ற

தமிழர் ஆதி காலச்
சாதனை சுவடுகளை போற்ற

இனிவரும் காலங்களில்
தமிழின் புகழை பறை சாற்ற

எட்டுதிக்கும் தமிழனை
தமிழனாய் வாழ வைக்க

தமிழால் இணைந்த மக்களாய்
தமிழரின் ஆட்சி தமிழ்நாட்டில்
சிறப்பாய் மலர

இனியேனும்
தமிழை வாசிக்க மட்டுமல்ல
சுவாசிக்கவும் செய்வோம்

வாழ்க தமிழ்
வளர்க தமிழன்
வெல்க தமிழாட்சி

தமிழ் மண்ணே வணக்கம்

- தமிழ்நேசன் த.நாகராஜ்

மண்ணை தோண்ட விண்ணை எட்டுவான் தமிழன் - பாகம் 1

மண்ணை தோண்ட விண்ணை எட்டுவான் தமிழன்

இது சித்தர் பாடல்களின் மறைபொருளாகும்
அந்த வரிகளை மெய்பிக்க எண்ணியே ஒரு முயற்சியை முன்னேடுக்கிறேன்
இனி உலகம் முழுவதும் வியாபித்து கிடக்கிற தமிழர்களின் தொன்மையையும்
அகழ்வாராய்ச்சியில் மறைக்கப்பட்ட தமிழர்களின் சிறப்புளையும்
ஆராய்ந்து இந்த பதிவின் வாயிலாக தொடர்க்கட்டுரையாக தரப்போகிறேன்
என்பதில் தமிழனாக மகிழ்ச்சிகொள்ளுகிறேன்
எனது இந்த முயற்சியில் யார் வேண்டுமானாலும் கைகோர்க்கலாம்
உண்மையுடன்
தமிழ்நேசன் த.நாகராஜ்
*****************************
மண்ணை தோண்ட
விண்ணை எட்டுவான் தமிழன் - பாகம் 1
கீழடி அகழ்வாராய்ச்சி!-
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் சிலைமானில் வலது பக்கம் திரும்பி ஒரு 3 கி.மி.ல் ரோட்டிலிருந்து 1கி.மி. செல்லும் ஒத்தையடி பாதையில் தென்னந்தோப்பில் அமைந்துள்ளது. பொதுவாக அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் வெட்டவெளி – ஒன்றும் விளையாமல் பொட்டல் காடாக இருக்கும். ஆனால் இது ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில், இரண்டு தனியார்க்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
மதுரைக்கு மிக அருகில் – 15கி.மி. தூரத்தில் அமைந்துயுள்ளது இவ்விடம். மதுரையின் வரலாற்று ஆய்வுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாக பள்ளிசந்தை அமையவுள்ளது. அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் சங்க இலக்கியங்களில் கூறப்படும் பெருமணலாக இருக்க வாய்ப்புயுள்ளதாகக் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சிவகங்கை அருகேயுள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களைக் கொண்டு அங்கே ஒரு அருங்காட்சியகம் உருவாக்கி, அதில் வைத்து பராமரித்து, மேலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்தாமல், மைசூருக்கு - கருநாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப் போவதாக வந்துள்ள செய்தி தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும்.
சிவகங்கை அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டார்கள் என்பதற்கான தடயங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்கவேண்டும் மற்றும் தமிழர் வரலாற்று ஆய்வு அருங்காட்சியகத்தை
அங்கேயே நிறுவ வேண்டும்
மற்றொரு ‘ஹரப்பா...’
அங்கே புதைந்த நகரம்பற்றி அரிய செய்திகள் - சான்றுகள் கிடைத்துள்ளன!
அது மற்றொரு ‘ஹரப்பா’ நகரம் போல,
நமது தமிழ் நாகரிகத்தினைப்பற்றி ஏராளமான
புதிய தகவல்களைத் தரும் ஊற்றுக் கண்ணாக அமைந்தால் அதிசயமல்ல.

நகர்ப்புறங்களை
அறியாதவர்களா தமிழர்கள்?
பழங்காலப் பொருள்களும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி
கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான
புதிய சான்றுகள் இதன்மூலம் நமக்குக் கிட்டியுள்ளன!
சங்ககால நாகரிகம், நகர்ப்புறங்களை அறியாத ஒன்று என்ற
ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை அகற்றிட இந்த அகழ்வாய்வு
புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிடும் வாய்ப்பை நமக்குத் தரவிருக்கிறது!
இவைகளை வைத்து அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க
மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்!

மதுரை அருகே கீழடியில் புதையுண்ட ஒரு நகரத்தையே அகழ்வாராய்ச்சி மூலம் மத்திய தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது.இது குறித்து தலைமைத் தொல்லியல் அதிகாரி அமர்நாத் கூறுகையில், "கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே, நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்தவற்றை, எங்கள் மத்திய அலுவலகத்தில் வைத்துப் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்

இதற்கிடையே கீழடி ஆராய்ச்சிகள் குறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகித்திய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார், இது தொடர்பாக அவர் தெரிவித்தது...

"தொல்லியல் பொருட்களை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லக்கூடாது 
என்று நீங்கள் கூறிவருவதற்காக காரணம் என்ன?"
"காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. அகழ்வு ஆய்வின் போது 5300 தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது."

"ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு
இப்படியான முனைப்புகள் ஏன் எடுக்கப்படவில்லை?"
"இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூட தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள்தான் இன்னும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் முதன்முறையாக தமிழகத்தில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூட புதையிடம்தான். ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் எல்லாம் இருந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹராப்பா நாகரிகத்துக்கு இணையான தொல்லியல் களம் தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது."

"அரசியல் ரீதியாக இந்த ஆராய்ச்சி எவ்விதத் தாக்கத்தை 
ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?"
"கருத்து அரசியல் ரீதியாகப் பார்த்தால் தமிழ் பாரம்பரியம் எவ்வளவு செழிப்புடன் இருந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இதைச் சொல்லலாம்."
"கீழடியில் இப்போது என்னென்ன தகவல்கள் கண்டறியப்பட்டிருக்கிறது?"
"கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு வழிக்கோளாக அமையும். இப்போது, இருக்கும் மதுரையில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய எவ்விதத் தடயங்களும் இல்லை. ஆனால், கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைக்கின்றன. சங்க இலக்கியத்தின் படி மதுரை என்பது திருபுவனத்துக்கு நேர் மேற்கேயும் திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கேயும்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மதுரை வடகிழக்கில் இருக்கிறது. இலக்கியம் சொன்ன இடத்தில் கீழடிதான் இருக்கிறது."

"தமிழக அரசிடம் என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கிறீர்கள்?"
"கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 சென்ட் வரைக்கும்தான் அகழ்வு செய்திருக்கிறார்கள். முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்து, இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசின் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த 110 ஏக்கரில் பல இடங்கள் தனியார் வசம் இருப்பதால் அரசு தலையிட்டு விரைவில் அந்த நிலங்களைக் கைப்பற்ற வண்டும். அப்போதுதான் தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்படும். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு சார்ந்து இயங்கும் ஒரு அரசின் மாவட்ட ஆட்சியர் கூட கீழடி பகுதியை இன்னும் பார்வையிட முன்வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது." என்றார்
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து 
நமது தமிழர் பண்பாட்டை பற்றிய தரவுகளும் 
தகவல்களும் மறுக்கவும் மறைக்கவும் முயற்சித்து வருகிறது
உலக தமிழர்கள் அனைவரும் மீண்டும் ஒருமித்து 
நமது தரவுகளை மீட்டேடுப்போம் வாருங்கள்
தோண்டல் தொடரும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் ஏன் போராடவேண்டும் ?

இது விவசாயிகளின் பிரச்சனை 
இதற்க்கும் நமக்கும் என்ன சம்மந்தம் ?
நமக்குத்தான் தேதியானால் சம்பளம் வருகிறதே
நமக்குத்தான் கணிணியும் கைப்பேசியும் இருக்கே
நமக்குத்தான் பணம் கொடுத்தால் உணவு கிடைக்கிறதே
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
டெல்டா மக்களாக இருந்தாலும்
சென்னைவாசியாக இருந்தாலும்
அனைவரும் தின்பது சோறு தானே
அதை விளையவைப்பது விவசாயிகள்தானே
அவர்கள் இல்லாவிட்டால் நாம் எதை தின்பது?
நேற்றைய விவசாயிகளின் பிள்ளைகள்
80 % பேர் இன்று விவசாயிகள் இல்லை
இன்றைய விவசாயிகளின் பிள்ளைகள்
விவசாயத்தை தொடர்வதே இல்லை
நாளை விவசாயிகளே இல்லையேன்றால்
விவசாயமே இருக்காதே
விவசாயம் செழிக்காதா எந்த நாடும்
வல்லரசு ஆகவே முடியாது
Digitel india வுக்கு பல லட்சம் கோடிகள் செலவு
செய்யும் இந்த அரசுகள்
விவசாயத்திற்க்கு பாரபட்சமாக செயல்படுவது ஏனோ?
விவசாயம் இல்லாவிட்டால் ஏதை தின்பது ?
கணிணியையும் கைப்பேசியையும் வெட்டி
ஊறுகாய் கூட போட முடியாது ?
தொடர்ந்து தமிழர்களின்
நிலங்களும் வளங்களும் சுரண்டபடுகிறது
நமது உரிமைகள் மறுக்கப்படுகிறது
இந்த உண்மையை உணருங்கள் 

வீதிக்கு வந்து போராடுங்கள்
நாளை நமது விதியை மாற்றலாம்

தமிழை பழிக்கும் மூடர்களே

தமிழையும் ஆதிதமிழர்களையும்
பற்றிய அறிவு இல்லாமல் அவற்றை பழிக்கும் மூடர்களே
தமிழருக்கு மட்டும் தாய் மொழியல்ல தமிழ்
உலக மொழிகளுக்கு எல்லாம் முதன்மை மொழியும்
தாய் மொழியும் தமிழ் தான்
உலக வரலாற்றில் தமிழையும் தமிழரையும்
நீக்கிவிட்டு மீண்டும் வரலாறு எழுத இயலுமா?
உலக நாகரிகத்தில் தமிழர் நாகரிகத்தின்
தாக்கம் இல்லாத நாகரிகத்தை வேறு எங்கும்
உங்களால் காண்பிக்க இயலுமா?
நோயற்ற வாழ்வு வாழ தமிழர் தந்த மருத்துவத்தை
இன்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும்
வியந்து அதையே பரிந்துரைக்கிறார் என்பது
உங்களுக்கு தெரியுமா?
தமிழும் தமிழினமும் சாதித்ததை
இந்த உலகில் வேறு எவரும் சாதிக்கவில்லை
என்பதினை நீங்கள் அறிவீரா?
அவ்வளவு ஏன் சீறி வரும் காளையை கட்டித்தழுவி
அதன் திமிலை தொடும் திமிரும் (திமிலும்)
எம் தமிழனுக்கே சொந்தம் என்பதினை
உங்களால் மறுக்க முடியுமா?
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
மனிதனின் மனக்கோட்டைக்கு
சாளரமாக (சன்னல்) எத்தனை மொழிகளை
வேண்டாமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்
ஆனால் வாசலாக தாய் மொழியை 
மட்டுமே கட்டமையுங்கள்
உயர உயர பறந்தாலும் காகம்
பருந்து ஆகாது.
என் உயிர் தமிழ் தாயே உனக்கு ஈடாக இவ்வுலகில்
வேறு எந்த சிறப்பான மொழியும் இல்லை
உனது பிள்ளைகளால் கட்டமைக்கப்பட்ட                                                                                                                               வீரமும் மருத்துவமும் நாகரிகமும்                                                                                                                                             வேறு எந்த கொம்பனாலும் கட்டமைக்க முடியாது
தமிழ்நேசன் த.நாகராஜ்

எந்நிலையிலும் பின் தொடருமே - மரணம்.

தோல்வியே அறியாதெனும் வெறிவேங்கையென்று
மனிதச்சதையைவிட்டு ஆன்மாவை உறிந்து                            
செல்லுமுணரும் களீர் நிகழ்வே - மரணம்!

வேதனையின் உச்சம்
பாவத்தின் மிச்சம் என்று,
வலியெனும் வலிமையினாலே
தோல்வியைத் தழுவும்
வெளீர் நிகழ்வே - மரணம்!

வாழ்வில் பலருக்கும் தீமையேனும், தீங்கேனும்,
தீண்டமையேனும் செய்வாயெனில் 
உன்னுடலை தீயிட்டு எரியூட்டும் 
எரிச்சலுணரும் தருணம் எளீர் நிகழ்வே - மரணம்!

உயிர் பிரியும் நொடியிலும்
மயிருருகும் சிதையிலும்
உள்கரையும் மனமெனும்
பித்தம் தெளிவதை
உணரும் நிளீர் நிகழ்வே - மரணம்!

உறவாயினும் நட்பாயினும்
உலகாயினும் நெளிவாயினும் நெஞ்சுருகும்
பிரிவுணரும் தளீர் நிகழ்வே - மரணம்!

பன்னடுக்கு வீடுகட்டி
பணமுடிச்சும் புகழனைத்தும் சேர்த்திட்டாலும்
இவ்வுலகே மெச்சும் நிலையெழுத்தால்
மனிதன் தலையெழுத்து
பிழையுணரும் பளீர் நிகழ்வே - மரணம்!

சொர்க்கமாயினும் நரகமாயினும்
தலைநகரமாக உன்னிலையறிந்தே
தருமன் தீர்ப்பு எழுமே
இறப்பின்னேயுணரும் சுளீர் நிகழ்வே - மரணம்!
எந்நிலையிலும் பின் தொடருமே - மரணம்.

தமிழா.... தமிழா.....

தமிழா.... தமிழா.....
விழித்தெழுந்தாய்
தரணியை... தரணியை...
நெகிழவைத்தாய்
வீராதி வீரர் நாம் என்று
விதி முழுவதும் ஒலிக்கவைத்தாய்
ஒழுக்கமும் பழக்கமும் நமதுடமை
மீண்டும் அதனை சிறப்பித்தாய்
தமிழகம் முழுவதும் கூடிநின்று
தன்மானத்தமிழன் என விளித்தாய்
சல்லிக்கட்டு தடை நீக்க
தமிழர் புரட்சி வெடிக்கவைத்தாய்
நாட்டு மாட்டை காத்திடவே
படிப்பையும் பணியையும் புறக்கணித்தாய்
வாடிவாசல் திறக்கும் வரை
வீட்டு வாசல் தொடர்பறுத்தாய்
மெரினா கடற்கரை அலையாக
தமிழர் படையை அணிவகுத்தாய்
சட்டமும் ஒழுங்கும் காத்துநின்று
காவல்துறையினை பெருமிகித்தாய்
அவசர சட்டம் தேவையில்லை
தார்மீக சட்டம் வேண்டுமென்றாய்
முன்னோட்ட போராட்டம் இதுவென்று
தமிழர் போராட்டம் தொடரும் என சிகித்தாய்
கோரிக்கை நிறைவேறும் காலம் வரை
கலையாவே மாட்டோம் கொக்கரித்தாய்
இனியும் இருப்பாய் தமிழா
நெருப்பாக இருந்தது போது செருப்பாக
நெருப்பை தொட்டவன் பதறிடவே
கனலாய் தகிலாய் எரிந்திடுவோம்
தடை அதை உடை புதிய சரித்திரம் படை
நடை நமது உடை பலர் வாயை பிளக்கும் நாகரீக கடை
வீரவணக்கம் தமிழர்களே
வீரவணக்கம் தமிழச்சியே
கரங்களை கோர்ப்போம் தமிழினமே
தமிழர் அறத்தினை காப்போம் தமிழினமே
வானமும் மண்ணும் வாழ்த்திடுமே
வாழ்வோம் வாழ்வோம் தமிழினமே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழினமே
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழினமே
உண்மை தமிழ் தாசனாக
உங்கள் 

துணிந்தால் வென்று விடலாம்....

வீனாக முயலவில்லை - கீழே
வீழ்ந்துவிடும் எண்ணமில்லை

தானாக நடக்கவில்லை - என்
தன்னம்பிக்கை குறையவில்லை

வாழ்வு ஏனோ விளங்கவில்லை - எங்கள்
மனங்களை மனிதன் மதிப்பதில்லை

காட்டில் பசுமை மரங்களில்லை - அதில் செய்த
கட்டில் மேலே தூக்கமில்லை

மரத்துக்கு மரம்
தாவித் தாவியே வளர்ந்த எங்களின்
தாவலும் துள்ளளும் மறந்துவிடாது

மாசு படிந்த தூசிகளை கையில் தொட்டால்
திட்டும் மனங்கள் வரது

இருந்தும் இல்லாமலும் போன இனம் போல
எங்களை யாரும் எண்ணக்கூடாது

ஆதாலால்

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் வென்று விடலாம்

- தமிழ்நேசன் த.நாகராஜ்"