வியாழன், 6 ஏப்ரல், 2017

துணிந்தால் வென்று விடலாம்....

வீனாக முயலவில்லை - கீழே
வீழ்ந்துவிடும் எண்ணமில்லை

தானாக நடக்கவில்லை - என்
தன்னம்பிக்கை குறையவில்லை

வாழ்வு ஏனோ விளங்கவில்லை - எங்கள்
மனங்களை மனிதன் மதிப்பதில்லை

காட்டில் பசுமை மரங்களில்லை - அதில் செய்த
கட்டில் மேலே தூக்கமில்லை

மரத்துக்கு மரம்
தாவித் தாவியே வளர்ந்த எங்களின்
தாவலும் துள்ளளும் மறந்துவிடாது

மாசு படிந்த தூசிகளை கையில் தொட்டால்
திட்டும் மனங்கள் வரது

இருந்தும் இல்லாமலும் போன இனம் போல
எங்களை யாரும் எண்ணக்கூடாது

ஆதாலால்

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்...
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் வென்று விடலாம்

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக