தோல்வியே அறியாதெனும் வெறிவேங்கையென்று
மனிதச்சதையைவிட்டு ஆன்மாவை உறிந்து
செல்லுமுணரும் களீர் நிகழ்வே - மரணம்!
மனிதச்சதையைவிட்டு ஆன்மாவை உறிந்து
செல்லுமுணரும் களீர் நிகழ்வே - மரணம்!
வேதனையின் உச்சம்
பாவத்தின் மிச்சம் என்று,
வலியெனும் வலிமையினாலே
தோல்வியைத் தழுவும்
வெளீர் நிகழ்வே - மரணம்!
வாழ்வில் பலருக்கும் தீமையேனும், தீங்கேனும்,
தீண்டமையேனும் செய்வாயெனில்
உன்னுடலை தீயிட்டு எரியூட்டும்
எரிச்சலுணரும் தருணம் எளீர் நிகழ்வே - மரணம்!
தீண்டமையேனும் செய்வாயெனில்
உன்னுடலை தீயிட்டு எரியூட்டும்
எரிச்சலுணரும் தருணம் எளீர் நிகழ்வே - மரணம்!
உயிர் பிரியும் நொடியிலும்
மயிருருகும் சிதையிலும்
உள்கரையும் மனமெனும்
பித்தம் தெளிவதை
உணரும் நிளீர் நிகழ்வே - மரணம்!
உறவாயினும் நட்பாயினும்
உலகாயினும் நெளிவாயினும் நெஞ்சுருகும்
பிரிவுணரும் தளீர் நிகழ்வே - மரணம்!
பன்னடுக்கு வீடுகட்டி
பணமுடிச்சும் புகழனைத்தும் சேர்த்திட்டாலும்
இவ்வுலகே மெச்சும் நிலையெழுத்தால்
மனிதன் தலையெழுத்து
பிழையுணரும் பளீர் நிகழ்வே - மரணம்!
சொர்க்கமாயினும் நரகமாயினும்
தலைநகரமாக உன்னிலையறிந்தே
தருமன் தீர்ப்பு எழுமே
இறப்பின்னேயுணரும் சுளீர் நிகழ்வே - மரணம்!
எந்நிலையிலும் பின் தொடருமே - மரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக