செவ்வாய், 29 செப்டம்பர், 2015

துளி பா!

வாக்குச் சீட்டு
தவணை முறையில்
நாட்டைக் கொள்ளையடிக்கத்
தன்மானத்தை இழந்து
மக்கள் எழுதித் தந்த
அனுமதி சாசனம்!
***
வாக்குச் சேகரிப்பு
கோடிகளைச் சுருட்டுவதற்கு
முன்னோட்டமாக
உன் கோவணத்தையும்
கேட்கிறான் பிச்சையாக!
***
சாதீ
நம்மைப் பிரிக்கும் முன்
தீயிட்டு எரிக்கப்பட
வேண்டிய தீ!
***
மீசை
ஆடவனின் கம்பீரம்
வீரத்தின் அடையாளம்!
***
பணம்
கருவறையில் துவங்கிக்
கல்லறை வரையிலும்!
***
நட்பூ
உள்ளங்கையில்
உறவான வாசனை
பூக்களின் உன்னதம்!
***
அம்மா
அன்பின் விலாசம்
மூன்றெழுத்தில்!
***
நகைக்கடைப் பணிப்பெண்
ஏழை விட்டில்
பிறந்தாலும் கையில்
விதவிதமான நகைகள்!
***
இடி மின்னல்
நீலவானத்தையே
முட்டிப் பிளக்கும்
இரட்டைக் குழல் துப்பாக்கி!

- தமிழ்நேசன் த. நாகராஜ்"

திங்கள், 14 செப்டம்பர், 2015

யார் நாளைய கலாம் ..?

பாருங்கள் மாணவர்களே !
இங்கே தான்
மாணவராய் விதையானவர்
விஞ்ஞானியாய் விருட்சமானார்..!

பாருங்கள் சிந்தனையார்களே !
இங்கே தான்
சீர்மிகு சிந்தனைவாதி
சிந்திக்கிறார்..!

பாருங்கள்  சாதிப்பவர்களே !
இங்கே தான்
சாலச்சிறந்த சாதனையாளர்
சாதிக்கிறார்..!

பாருங்கள் அறிவியலார்களே
இங்கே தான்
அறிவுமிகு ஆராய்ச்சியாளர்

ஆராய்ந்துகொண்டிருக்கிறார்..!

பாருங்கள் கல்வியாளர்களே !
இங்கே தான்
கணம் பொருந்திய கற்பிப்பாளர்
கற்பிக்கிறார்..!

பாருங்கள் தமிழர்களே !
இங்கே தான்
தாய்மொழி நேசர்
தமிழை நேசிக்கிறார்..!

பாருங்கள் தாயக பற்றாலர்களே !
இங்கே தான்
மேதகு அய்யா ஆ.பா.ஜெ அப்துல் கலாம் அவர்கள்
தன்னை தாய்நாட்டிற்கு அர்பணிக்கிறார்..!

வாருங்கள் நாமும் அவர் வழியில் கனவுகள் காண்போம்
கூறுங்கள் இளைஞர்களே உங்களில்
யார் நாளைய கலாம் ...?

-தமிழ்நேசன் த.நாகராஜ்"

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

தாய் மனமும் தமிழும் ஒன்றே...!!!

தமிழா நீ
தமிழோடு நிமிர்ந்து நின்றாலே
தமிழ் இமயத்தை தாண்டி நின்றிடுமே
பிறமொழி வேடம் அணிந்தாலே
உன்மொழித் திறனே அழிந்திடுமே

சிறுதுளியல்லவே நீ உடனே உலர்ந்துவிட
விடாமல் பொழியும் அடைமழை நீ
சிறுஏணியல்லவே நீ  ஏறிமிதிப்பட
ஏறவே தயங்கும் எரிமலை நீ

வெற்று ஓசையல்லவே நீ ஓய்ந்துவிட
பற்றி வானத்தையேப் பிளந்திடும் பேரிடி நீ
சுடரல்லவே நீ அனைந்துவிட
சுட்டெரிக்கும் சூரியன் நீ

தமிழ் மெல்லச்சாகாது நீ
அன்னிய மொழியை நினைந்து
அன்னை தமிழை மெல்லமறந்தாலே அமைதியாய் சாகும்

தாயின் மனமும் தமிழும் ஒன்றே
தரம்பாராமல் நீ கண்ணாய் பார்த்தாலே உன்னை பொன்னாய் காத்திடுமே

வாழ்க தமிழ்

-தமிழ்நேசன் த.நாகராஜ்"

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

அம்மா! என்றும் நீ என்னவளே...


பத்து மாதம் சுமந்தவளே
பக்குவமாய் எனை காக்க
பத்தியம் பல இருந்தவளே

உதிரத்தை உணவாக்கி
உன்னுயிராய் எனை காத்தவளே
உலகத்தில் நான் கண்விழிக்க
உன் தூக்கம் மறந்தவளே

பார்த்துப் பார்த்து வளர்த்தவளே
பாரில் நானுயர உழைத்தவளே
பாசம் காட்டி எப்பொழுதும்
பகலிரவாய் எனை அணைத்தவளே

அன்பையும் பண்பையும் எனது அடையாளமாக்கி
ஆற்றலும் போற்றலும் என் நிலையாக்கி
அறிவும் ஒழுக்கமும் தந்தவளே
ஆதிசக்தியாய் துணை நின்றவளே

அன்றுனது முந்தானை வாசம்
என்றும் எனது நற்சிந்தனையாய் பேசும்..
அம்மா! என்றும் நீ என்னவளே


-தமிழ்நேசன் த.நாகராஜ்"

"சுதந்திர கொடி பிடித்த தமிழ் சிறுவனின் மனதுக்குள்...!!!

அன்று பார் புகழ வாழ்ந்த இனம்

இன்று வஞ்சகத்தால் சூழ்ந்த இனம்.!

அன்று பார் ஆண்ட மன்னன் இனம்

இன்று  நாதியற்று போன இனம்.!

எந்த இனமும் தந்திராத
பல சொந்த உயிர்கள் தந்த இனம்.!

இந்திய நாட்டுக்குள் வாழ்ந்தாலும்
சிறு மாநிலத்தில் சுருங்கிய இனம்.!

அணுஉலையேனும் ராட்சசனை
சிறு சலனத்தோடு ஏற்ற இனம்

ஆழ்துளையிடும் மீத்தேனை பற்றி
அறியாமல் அனுமதித்த இனம்

ஒரு பசுவை கொன்றால் கூட பதறியேழும் நாட்டில் 
20  உயிர்களை சுட்டுக்கொன்ற வஞ்சகத்தை
 வாய்மூடி பார்த்த  இனம்.!

தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை
நமக்கு முல்லைப் பெரியாறில் பங்கும் இல்லை.!

எம் மாநிலத்தில் ஆங்காங்கே வெளிச்சம் இல்லை.!
தயாரித்த எங்களுக்கே போதிய மீன்சாரம் இல்லை.!

தமிழகத்தில் காவேரி நதியின் ஓட்டம் இல்லை.!
அதை கேட்க இந்தியாவிற்க்கு தமிழன் மேல் நாட்டம் இல்லை.!

கடல் கடந்து தமிழ் இனம் அழிந்த போது
அதை நிறுத்தவோ தடுக்கவோ முயலவில்லை.!

கடல் நடுவே சுடப்பட்டு உயிர் இழக்கும்
நமது தமிழ் மீனவரை காக்கவும் முன்வரவில்லை.!

நம்முடைய கச்சதீவை எவர் வசமோ தந்து விட்டு
அதை காக்க நீர்முழ்கி கப்பல்களை தந்த தேசம்.!

சொந்த நாட்டு தமிழ்மக்களை கொன்று ஒழிக்க
அண்டை நாட்டுக்கு ராணுவத்தை தந்த தேசம்.!

சர்வதேச மாமன்றத்தின் போர் குற்ற தீர்மானத்தில் கூட
தமிழர்களுக்கு ஆதரவு தராமல் மவுனம் காத்த தேசம்.!

பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்புமிக்க ஏரு தழுவலுக்கு
தடைவிதித்து காளை இனங்களை ஏற்றுமதி செய்யும் தேசம்.!

அண்டை மாநிலத்திற்கு செயற்கை எரிவாயுதனை தருவிக்க
தமிழ் நாட்டின் இயற்கை விவசாய நிலங்களின் உயிரை மாய்த்த தேசம்.!

இப்படி தமிழனை அழித்த இந்த தேசத்தின்
இந்த -சுதந்திர கொடி-யினை நாம் தீண்டலாமா?
என்று எண்ணுகிறானோ அந்த தமிழ் நாட்டு சிறுவன்….!!!

வாழ்க தமிழ்

சிறுவன் மனதை வாசித்தவன்

-தமிழ்நேசன்"