வெள்ளி, 11 செப்டம்பர், 2015

தாய் மனமும் தமிழும் ஒன்றே...!!!

தமிழா நீ
தமிழோடு நிமிர்ந்து நின்றாலே
தமிழ் இமயத்தை தாண்டி நின்றிடுமே
பிறமொழி வேடம் அணிந்தாலே
உன்மொழித் திறனே அழிந்திடுமே

சிறுதுளியல்லவே நீ உடனே உலர்ந்துவிட
விடாமல் பொழியும் அடைமழை நீ
சிறுஏணியல்லவே நீ  ஏறிமிதிப்பட
ஏறவே தயங்கும் எரிமலை நீ

வெற்று ஓசையல்லவே நீ ஓய்ந்துவிட
பற்றி வானத்தையேப் பிளந்திடும் பேரிடி நீ
சுடரல்லவே நீ அனைந்துவிட
சுட்டெரிக்கும் சூரியன் நீ

தமிழ் மெல்லச்சாகாது நீ
அன்னிய மொழியை நினைந்து
அன்னை தமிழை மெல்லமறந்தாலே அமைதியாய் சாகும்

தாயின் மனமும் தமிழும் ஒன்றே
தரம்பாராமல் நீ கண்ணாய் பார்த்தாலே உன்னை பொன்னாய் காத்திடுமே

வாழ்க தமிழ்

-தமிழ்நேசன் த.நாகராஜ்"

1 கருத்து: