திங்கள், 19 அக்டோபர், 2015

தமிழா தமிழா தமிழ் பேசு...!!!

அழகாய் கனிவாய் தமிழ் பேசு
அரும்பெரும் ஊற்றாய் தமிழ் பேசு
அழிவில்லாத் தமிழில் நீ பேசு
அறிவொளியாக மிளிரத் தமிழ் பேசு

உணர்வாய் உயிராய் தமிழ் பேசு
உண்மை தன்மையில் தமிழ் பேசு
ஊழிவெல்ல தமிழில் நீ பேசு
உன் திறமைகள் வளர்த்திடும் தமிழ் பேசு

பாரதி எழுச்சியுடன் தமிழ் பேசு
பாவலர் எழுதியாளித்த தமிழ் பேசு
பழியில்லா தமிழில் நீ பேசு
பலசிறப்பு உனக்களிக்கும் தமிழ் பேசு

வள்ளுவன் குறளாய் தமிழ் பேசு
வற்றாத நேசிப்புடன் தமிழ் பேசு
வழி தந்த தமிழில் நீ பேசு
வண்ணமாய் ஒளிரவே தமிழ் பேசு

தீண்டாமையை ஒழித்த தமிழ் பேசு
தீவாய் நீவாய் தமிழ் பேசு
தீக்கதிராய் தமிழில் நீ பேசு
தீங்கனியின் இனிமையாய் தமிழ் பேசு

தமிழா தமிழா தமிழ் பேசு...!!!

-தமிழ்நேசன் த.நாகராஜ்"